எனக்குள்ள வேதனையை
எவர்க்கும் உரைக்காமலே
இறந்து விட துணிந்தேன்
என்னைத் தடுத்து விட்டனர்....
கடல் மீனாக வாழ்ந்த நான்
திமிங்கலத்தின் வாயில் புக
இறப்பு என்னை எதிர்கொண்டு
கரைக்கு தள்ளியது.......
நீரின்றி வாழவும் முடியாமல்
நிலத்தினிலே சாகவும் முடியாமால்
சபிக்கப்பட்டேன்
இறப்பைத் தேடி இன்னலுற்றேன்....
அழவும் முடியாமல்
ஆறுதல் அடையவும் முடியாமால்
தேறுதல் இன்றி வாழ்கின்றேன்
என் நிலை எவர்க்கும் வேண்டாம் என்றே
இறைவனை வேண்டுகின்றேன்...................................
வேண்டுதலுடன்
பொன்னுதுரை.செ
Saturday 23 June, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment