நான் இவன் இல்லை

நான் இவன் இல்லை
நம்புங்க இது நான் இல்லை

Friday 10 August, 2007

சிகரெட் குடிப்பியா

சிகரெட் குடிப்பியா
சிகரெட் குடிப்பியா
அப்பா மகனை அடித்தார்
மறு கையில் சிகரெட்டுடன்................

என்ன பயன்

எவ்வளவு தண்ணீர்
இருந்து என்ன பயன்
தாகத்திற்கு தண்ணீர் இல்லையே
கடற்கறையில் நான்

அன்றும்... இன்றும்....

அன்று
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
வள்ளல் என்றார்கள்

இன்று
நான் நீர் ஊற்றினேன் ரோட்டோர செடிக்கு
பைத்தியம் என்கிறார்கள்

என்னத்த சொல்றது..........

Tuesday 7 August, 2007

பாரட்ட தோணலையே!

எங்கோ
ராகுல் டிராவிட்
நல்லா விலையாடினா
பாரட்ட தெரிந்த நமக்கு

பக்கத்து வீட்டு
சாகுல் ஹமீது
நல்லா விலையாடினா
பாரட்ட தோணலையே
எதனால்
பொறாமையினாலா!
இல்லை
பக்கத்து வீடுதானே என்பதாலா!

Sunday 5 August, 2007

மனக்காயம்

காயத்திற்கு
மருந்து போடுகிறேன்
மருந்து போடுகிறேன்
என்றே
காயத்தை ஆழப்படுத்துகிறார்கள்

மனக்காயத்திற்கு
ஒரு போதும்
மருந்து போடாதீர்கள்
அதனை விட்டுவிடுங்கள்
அதன் வழியில்

மறக்கிறேன்
மறக்கிறேன்
என்று
நினைப்பதே நினைவுதானே
எப்படி மறப்பதாய் ஆகும்

கடலை போட

ஆண்களே!
கடலை போட
மாடர்ன் பெண் தேவை
ஊர் சுற்ற
மாடர்ன் பெண் தேவை
ஆனால்
திருமணத்திற்கு மட்டும்
அடக்கமான
அமைதியான
குடும்ப பெண் தேவை......
இது சரியா............

Friday 3 August, 2007

அன்று... இன்று....

அன்று

சாதிக்க வேண்டும்
இல்லையேல்
சாக வேண்டும்

இன்று

சாவதிற்குள் சாதிக்க வேண்டும்

குறை

குறை சொல்லும்
மனிதர்கள் எல்லாம்
குறைகளோடே இருக்கிறார்கள்

அழகு

அழகையே
அடிப்படையாய் கொண்டு
அமைவதிந்த காதல் எனில்
அவனியிலே
கல்லறைகளே காவியங்களாகும்...........

Thursday 2 August, 2007

ஆணுக்கு நிகர் பெண்

பெண்ணே!
ஆணுக்கு நிகர் பெண் என்று
காட்ட நீ எடுத்த கொண்ட
ஆயுதம் ஆடையா?

பேய்

பேய்

பேய் எப்படி உருவாகிறது?
நாம் இறந்தவுடன் உடலில்
இருந்து உயிர் பிரிந்து பேயாகிறது


இது உண்மையானால்
ஆடு மாடு.... இறந்தாலும்
பேயாக வந்து நான் உயிருடன்
இருக்கும்போது என்னை அடித்தாயே
என்று மனிதனை பிடிக்க வேண்டும் இல்லையா...

மனிதனில் மட்டும்தான் பேயா..........

கடவுள்

கடவுளா? மனிதனா?

கடவுள் இருக்கிறாரா?
இங்கு மனிதனுக்கே இருக்க இடம் இல்லை
கடவுளுக்கு தேவையா கோவில்......


தூசியிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
என்றால் கோவில் எதற்கு?

சிந்தியுங்கள் சில நிமிடம்....................

வெற்றி

என் மனம் என்னிடம் கூறியது

வேடிக்கை பார்க்கும் மனிதரை காட்டிலும்
விளையாடிய தோல்வியே மேல்

நீ பெறும் ஒவ்வொரு தோல்வியிலும்
ஒருவர் வெற்றி பெற காரணமாய் இருந்திருக்கிறாய்

சும்மா புகுந்து கலக்குங்க வெற்றி பெறுவாய்
என்ற நம்பிக்கையோடு....................