நான் இவன் இல்லை

நான் இவன் இல்லை
நம்புங்க இது நான் இல்லை

Wednesday 27 June, 2007

கா........த..........ல்

கா - காத்திருப்பர் காதல் காலை வாரிவிடும் வரை
கடைசியில் காவி உடை அணிந்து திரிவர்

த - தன்னிலை அறியாமல் தவமிருப்பர் காதலுக்காய்
தன்னிலை அறிந்தபின் தனித்திருப்பர்

ல் - ல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்வர்
இருப்பதும் இல்லாமல் போகும் வரை

Monday 25 June, 2007

தோல்வி

ஜெயிக்க வேண்டும்
என்ற வெறியை விட
தோற்று விடுவோமோ
என்ற பயம்
அதிகமாக இருந்ததே
என் தோல்விக்கான காரணம்



தோல்வியுடன்
செ.பொன்னுதுரை

சுற்றிக் கொண்டே

சுற்றிக் கொண்டே
இருக்கின்றேன் ஒரே இடத்தில்
மின்விசிறியைப் போன்று.............

மணற்வீடு

கரைந்துவிடும் தெரிந்தும்
கட்டினேன் மணற்வீடு
கடற்கறையில்.........




செ.பொன்னுதுரை

Saturday 23 June, 2007

இறப்பைத் தேடி

எனக்குள்ள வேதனையை
எவர்க்கும் உரைக்காமலே
இறந்து விட துணிந்தேன்
என்னைத் தடுத்து விட்டனர்....

கடல் மீனாக வாழ்ந்த நான்
திமிங்கலத்தின் வாயில் புக
இறப்பு என்னை எதிர்கொண்டு
கரைக்கு தள்ளியது.......

நீரின்றி வாழவும் முடியாமல்
நிலத்தினிலே சாகவும் முடியாமால்
சபிக்கப்பட்டேன்
இறப்பைத் தேடி இன்னலுற்றேன்....

அழவும் முடியாமல்
ஆறுதல் அடையவும் முடியாமால்
தேறுதல் இன்றி வாழ்கின்றேன்
என் நிலை எவர்க்கும் வேண்டாம் என்றே
இறைவனை வேண்டுகின்றேன்...................................





வேண்டுதலுடன்
பொன்னுதுரை.செ

Wednesday 20 June, 2007

கற்பனைக் காதலி

சிறம் தாழ்த்தி
கொடி இடையாட்டி
தளிர் நடைபோட்டு
தவழ்ந்து வரும் பெண்
தமிழினப் பெண்
என்கண்முன்!
நிலவு தோன்றவில்லை
கேட்டால் அமாவசையாம்!
இல்லை இல்லை!
நிஜத்தில் அவள்
அழகில் நாணம் கொண்டு!
நித்திரையில் எத்திசையும்
விண்மீண்களும் விசிறிவிட்டது
விடியும் வரை!
மொட்டுகளும் முகம்
திறக்கவில்லை - அவள்
நித்திரையில் கனவு கலையுமென!
கனவில் காகமும் கவிபாடியது
இக்கவிதையின் கண்ணயற்விற்காய்!
சிலைகளும் சிணுங்கின
நிஜ சிலையின் அழகைக்கண்டு!
நிலவும் தவமிருந்த்து
கனவில் இவள் வருவளா என்று!
அப்படியொருவள் அவனியில் இருந்தால்
இப்படியொருமுறை வரச்சொல்லுங்கள் பார்க்கலாம்..............




கற்பனையுடன்
செ.பொன்னுதுரை.

வலியோடு சேர்ந்த வாழ்க்கை

எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் அழியும்போது
ஏற்படுகின்ற வலி
வலியோடு சேர்ந்த வாழ்க்கை
வழிதான்என்ன?




வலியுடன்
செ.பொன்னுதுரை

பிறப்பதேன் இம்மண்ணில்

மனிதரை மனிதர்
மனிதராய் மதிக்காவிடில்
இம்மண்ணில் வாழ்ந்தென்ன

இறப்பதே எல்லோர்
முடிவென்றால்
பிறப்பதேன் இம்மண்ணில்

துடிப்பதோ என் இதயம்
இதை அறியுமா இவ்வையம்


துடிப்புடன்
செ.பொன்னுதுரை

முனனோட்டம்

உங்களின் பின்னூட்டத்தில்
உள்ளது எனது முன்னோட்டம்





செ.பொன்னுதுரை

நண்பர்களே

நண்பர்களே

எனையும் ஏற்றுக்கொள்ளுங்கள்

உங்களில் ஒருவனாக....................................




நட்புடன்

செ.பொன்னுதுரை

தொடக்க காதல்

இதயக்கதவோரம் காவல் வைத்து என்
இதயக்கதவினை பூட்டிவிட்டேன் சாவியைத் தொலைத்துவிட்டு
சந்தோசமாகத்தானிருந்தேன்-ஆனால்
நீயோ சாவித்துவாரம் வழியே உள்புகுந்து
சத்தம் போடாமல் பெரிதாகிவிட்டாய்
சாவியைத் தேடினேன் கிடைத்தது
சாவியுடன் தொலைந்த என்
இதயத்தை எங்கு சென்று தேடுவேன்.................



உண்மையான காதலுடன்...............
செ.பொன்னுதுரை