நான் இவன் இல்லை

நான் இவன் இல்லை
நம்புங்க இது நான் இல்லை

Monday 5 July, 2010

உளவியல் பார்வை- II(சைக்காலஜி)

உளவியல் பார்வை- I(சைக்காலஜி)படித்தபிறகு இதனை படிக்கவும்( உளவியல் பார்வை- 1(சைக்காலஜி) )
1.ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் இந்த உலகிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர் யாரென்று கேட்டார் எல்லோரும் அப்பா, அம்மா ,தாத்தா, பாட்டி, தங்கை, என்று தங்களுக்கு பிடித்தமானவர்களை கூறினார்கள். ஒரு மாணவன்(மாணவி) மட்டும் எனக்கு மிகவும் பிடித்த நபர் நான்தான் என்றான்(ள்)(காதலை கண்டேன் படத்தில் தமன்னா கூறுவதுபோல் I love myself என்றான்(ள்)). ஆமாம் நமக்கு இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்தமான நபர்(கருப்பு, ஒல்லி,குண்டு வழுக்கை,எப்படி இருந்தாலும்) நாமாகத்தான் இருக்க வேண்டும்(நமக்கே நம்மை பிடிக்கவில்லையென்றால் பிறருக்கு எப்படி நம்மை பிடிக்கும்). நாம் நம்மை விரும்ப ஆரம்பித்து விட்டால், மற்றவர்களும் நம்மை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.
2.தமிழில் எனக்கு சில படங்களை பிடிக்காது ஏனென்றால் அந்த படங்களை நாம் பார்த்து முடித்தவுடன் எதையோ இழந்த ஒரு உணர்வு ஏற்படும்.( உதாரணமாக 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்). அந்த காலத்தில் நல்லதேங்கா என்றொரு திரைப்படத்தை பார்த்த பலர் இரண்டு மூன்று நாட்கள் அந்த பாதிப்பிலிருந்து மீளவே இல்லையாம்( உணவு கூட உண்ணாமல் இருந்தார்களாம்).திரைப்படங்கள் நமக்குள் நேர்மறையான எண்ணங்களை உருவாக்க வேண்டும், சிரிக்க ரசிக்க செய்யவேண்டும்,அழ வைக்க கூடாது( கஸ்டத்தை மறக்கலாம்னு தியேட்டருக்கு போனா அங்கேயும் அழவைச்சா). சில படங்களை பார்த்து விட்டு வெளியில் வரும்போது நாமே ஜெயித்தது(ஹீரோ ஜெயித்தது) போன்ற ஒரு உணர்வு ஏற்படும்( சிலர் தியேட்டரின் தூனில் ஓங்கி ஒரு குத்து விட்டுக் கொண்டே வெளியில் வருவார்கள்(நன்றாக கவனித்து பாருங்கள்).

No comments: