நான் இவன் இல்லை

நான் இவன் இல்லை
நம்புங்க இது நான் இல்லை

Sunday 4 July, 2010

உளவியல் பார்வை- 1(சைக்காலஜி)

எல்லாவற்றிலும் ஒரு சைக்காலஜி இருக்கும் அவற்றைப்பற்றி(படித்தது+ என் கருத்து) உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1.மேலை நாட்டில் ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டால் come on getup come come என்று கூப்பிடுவார்கள். அதுவே நம் வீட்டில்(நம் நாட்டில்) வீட்டில் உள்ள அனைவரும் ஓடோடிச் சென்று தூக்குவோம்( அதுதானே நம் பண்பு)இப்படியே நாம் வளர்வதால்தான் பெரியவர்களான பிறகும் வாழ்க்கையில் அடிபட்டு(தோல்வியடையும்போது) கீழே விழும் போது யாராவது வந்து தூக்கி விட மாட்டார்களா என்று கீழேயே கிடக்கிறோம் பிறர் வந்து தூக்கி விடும் வரை. பிறர் நம் மீதேறி முன்னே போய் கொண்டே இருக்கிறார்கள்.
(ஓட்டப்பந்தயத்தில்(வாழ்க்கையில்) மூன்றாவதாக ஓடிக்கொண்டிருக்கும் நான், அதே இடத்தை தக்க வைத்து கொள்வதற்கு கூட ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் எனக்கு பின்னால் ஓடி வருபவர்கள் என்னை முந்தி ஓடிக் கொண்டே இருப்பார்கள்)

2.நீங்கள் T.V பார்த்து கொண்டிருக்கும்போது விளம்பரம் வந்தால் மட்டும் volume அதிகமாகும்(நன்றாக கவனித்து பாருங்கள்) ஏனென்றால் சிதறிய உங்கள் கவனத்தை T.V யை நோக்கி கொண்டு வருவதற்காகவே...

3.பேருந்தில்(Bus)சிகப்பு கலர் பெயிண்ட் அடிப்பதற்கு(இன்று கலர்புல்லாக இருக்கட்டுமே என்று என்று பல கலர்களில் பெயிண்ட் அடிக்கிறார்கள்)காரணம் படிக்கட்டில் தொத்திக்கொண்டு பயணம் செய்பவர்களுக்கு ஒரு வெறுப்புணர்வை(irritate) உண்டாக்குவதன் மூலம் அவர்களை பேருந்தில் உள்ளே வரவழைப்பதற்கான முயற்சியே..

4.ஒரு சிறுவனை(சிறுமி) ஒரு டம்ளர் அல்லது சொம்பில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லுங்கள் அழகாக கொண்டு வந்து தரும். இப்பொழுது மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள், கொண்டுவரும்பொழுது பார்த்து கொண்டு வா என்று சொல்லுங்கள் குழந்தை கண்டிப்பாக கீழே போட்டுவிடும் ஏனென்றால் அதுவரை அந்த சிறுவன்(சிறுமி) கீழே விழுவதற்கான சாத்தியம் பற்றி யோசிப்பதில்லை. கீழே விழுந்துவிடுமோ என்று யோசிக்கும்போதுதான் அவன்(அவள்)தவறவிடுகிறான்.(தோற்று விடுவோமோ என்ற பயம்தான் ஒருவனின் தோல்விக்கு காரணமாகிறது...)

1 comment:

Karna said...

boss semaya yocikinga ponga...
i like it