பெண்ணில் பிறந்து
மண்ணில் வளர்ந்து
மண்ணுக்குள் செல்கின்ற மானிடனே
நேற்றைய உலகம்
நாளைய உலகம்
இரண்டுக்கும் இடையில் இருப்பவனே
காதலும் வேண்டாம்
காவியம் வேண்டாம்
கல்வியை மட்டும் தொடருங்களேன்
என் நிலை வேண்டாம்
பிறர் நிலை வேண்டாம்
உங்கள் நிலை உயர உழையுங்களேன்
ஆயுள் முழுதும்
ஆயிரமாயிரம்
பணம் குவிக்கின்ற அரசியலே
உன் ஆயுள் முடிந்தபின்
ஆறடி நிலம்தான்
ஆண்டவன் எழுதிட்டு சென்று விட்டான்
ஜாதியை துறந்து
மதத்தினை மறந்து
மனிதராய் மட்டும் வாழுங்களேன்
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணினை
பாரினில் உலவச் செய்யுங்களேன்
பாரத் மாதகீ ஜெ...............................
Monday 9 July, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment